மறு முறையும் வைக்க தோன்றும் தக்காளி கார சால்னா செய்வது எப்படி ?

Summary: இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தக்காளி கார சால்னா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் அடுத்த முறையும் இதை வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த தக்காளி கார சால்னா அற்புதமான சுவையில் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் இட்லி தோசைக்கு சாம்பார் வைப்பதுக்கு பதில் இந்த தக்காளி கார சால்னா செய்து பார்க்கலாம்.

Ingredients:

  • ½ tsp சீரகம்
  • 1 tsp தனியாதூள்
  • 2 கிராம்பு
  • 3 tbsp துருவிய தேங்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1 துண்டு பட்டை
  • 1 tsp சோம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tsp கசாகசா
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 2 tsp மிளகாய் தூள்
  • அரைத்த மசாலா
  • தண்ணீர்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் தனியா, ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கசகசா, போன்ற பொருட்களை சேர்த்து வறுத்து தனியாக குளிர வைக்கவும்
  2. பின் தீயை மிதமாக ஏறிய விட்டு வறுக்கவும் பின் மனம் வர தொடங்கியதும் இதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஐந்து பல் பூண்டு, இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு கடாயை அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின் இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் முன்று டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின் தேங்காய் நன்கு வதங்கி வந்ததும் கடாயை இறக்கி குளிர வைத்து கொள்ளுங்கள்.
  5. பின் அனைத்து பொருட்களும் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து
  6. அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு சேர்த்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
  7. பின் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி பின் நாம் அரைத்த மசாலா விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
  8. பின் சால்னா நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் நாம் வைத்திற்கும் சிறிது கொத்தமல்லியை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி கார சால்னா தயார்.